![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-22-Nov-2023-10-16-AM-3509.jpg)
கோலாலம்பூர், நவ 22 – இனியும் ஒரு நெருக்கடியான நிறுவனமாக இல்லையென ஏர் ஆசிய X தெரிவித்துள்ளது. மலேசியாவின் பங்குச் சந்தை பட்டியலிருந்து நீக்கப்படும் அச்சுறுத்தலை நீக்கி, நிதி நெருக்கடியில் உள்ளதாக ஏர்ஆசிய X (Air Asia X) வகைப்படுத்தப்படவில்லை என்று அந்த நிறுவனத்திடம் மலேசிய பங்கு பரிவர்த்தனை கூறியுள்ளது. ஏர்ஆசியா எக்ஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான Capital A ஆகிய இரண்டும் கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக விமான பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு உள்ளானதை தொடர்ந்து கடுமையான இழப்புக்கு உள்ளாகியதால் நிதி திரட்டும் நடவடிக்கையில் தீவர கவனம் செலுத்தின.
அந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு PN17 அல்லது நிதி நெருக்கடிக்கு உள்ளான நிறுவனமாக Bursa Malaysia Securities வகைப்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்கள் நிதியை நிலைப்படுத்தத் தவறினால், அத்தகைய நிறுவனங்கள் பரிமாற்றத்திலிருந்து பட்டியலிடப்படலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. ஜூலை மாதம், ஏர்ஆசிய X தனது கடன் மறுசீரமைப்பு, பங்கு ஒருங்கிணைப்பு மற்றும் அதன் வணிகத் திட்டத்தின் திருத்தம் உட்பட, அதன் நிதி நிலையை மேம்படுத்த பெரிய அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறி, அந்த வகைப்பாட்டை மாற்றுமாறு பங்குச்சந்தையைக் கேட்டுக் கொண்டது. அனைத்து நிபந்தனைகளையும் நிறைவு செய்ததைத் தொடர்ந்து ஏர் ஏசியா X, இனியும் ஒரு நெருக்கடியான நிறுவனமாக வகைப்படுத்தப்படவில்லையென மலேசிய பங்கு பரிவர்த்தனை மையம் கூறியுள்ளது.