![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-12-Feb-2024-01-22-PM-5140.jpg)
கோலாலம்பூர், பிப்ரவரி 12 – சீனப் பெருநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும், ஒப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு நடவடிக்கையின் நான்காவது நாளான நேற்று, நாடு முழுவதும், 14 மரணங்களை உட்படுத்திய, ஆயிரத்து 203 சாலை விபத்துகள் பதிவுச் செய்யப்பட்டன.
ஆயிரத்து 480 வாகனங்கள் விபத்தில் சிக்கியன.
சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை தொடங்கி, நாளை வரை ஒப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு நடவடிக்கை தொடரும்.
PLUS, LLM நெடுஞ்சாலை வாரியம், தீயணைப்பு மீட்புத் துறை, JPJ சாலை போக்குவரத்து துறை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இம்முறை இந்த ஒப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.