நியூ யார்க், மார்ச் 18 – அமெரிக்கா நியூ யார்க்கில் அடிக்கடி ஒற்றைத் தலை வலியால் தவித்து வந்த ஆடவரின் மூளையில், Tape Worm எனப்படும் நாடாப்புழு முட்டைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால், அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
எத்தனையோ மருந்துகளைச் சாப்பிட்டும் வலி கேட்காத 52 வயது அந்நபர், கடைசி முயற்சியாக மருத்துவர் ஒருவரைப் போய்ப் பார்த்திருக்கிறார்.
வலிக்கான அறிகுறிகளை கேட்டறிந்த மருத்துவருக்கு சந்தேகம் எழவே, அந்நபரின் மூளையை scan செய்துப் பார்க்கலாம் என ஆலோசணைக் கூறியுள்ளார்.
அப்படி scan செய்து பார்த்த போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது; அவ்வாடவரின் மூளைக்குள் நாடாப்புழு முட்டைகள் இருப்பது கண்டெடுக்கப்பட்டது.
மேற்கொண்டு பரிசோதனைச் செய்ததில், அந்நபருக்கு neurocysticercosis எனப்படும் நோய் கண்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டது.
அந்நோயானது, மூளை மற்றும் தசைகள் போன்ற திசுக்களில் நுழையக் கூடிய பன்றி நாடாப்புழு லார்வாக்களால் ஏற்படும் ஒரு வகை தொற்றாகும்.
கைகளைச் சுத்தமாக கழுவாதது மற்றும் முழுமையாகச் சமைக்கப்படாத இறைச்சி வகைகளை உட்கொள்வதால் அத்தொற்று ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
விசாரித்ததில், தனது வாழ்நாளின் பெரும்பகுதியில் அரை வேக்காடு இறைச்சிகளையே தாம் அதிகம் உண்டு வந்திருப்பதை அந்நபர் ஒப்புக் கொண்டார்.
அந்த நபருக்கு அதிர்ஷ்டம் நன்றாக இருந்ததால், அவருக்கு ஒட்டுண்ணி மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு, அவர் குணமடைந்து வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளார்.