Latestமலேசியா

ஒலிப்பெருக்கி வைக்கும் பிளாஸ்டிக் பெட்டிக்குள் போதைப்பொருள் மறைத்து வைப்பு; தாவாவில் வெளிநாட்டு ஆடவர் கைது

தாவாவ், ஜூன்-5 – சபா, தாவாவில் ஒலிப்பெருக்கி வைக்கும் பிளாஸ்டிக் பொட்டலத்தில் 2 கிலோ கிராமுக்கும் மேற்பட்ட எடையிலான போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு ஆடவர் கைதாகியுள்ளார்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் வாக்கில் கட்டுமானத்தளமொன்றில் உள்ள வீட்டில் வைத்து 45 வயது அந்நபர் கைதானார்.

2 பிளாஸ்டிக் பைகளில் கண்டெடுக்கப்பட்ட ஷாபு வகை போதைப்பொருளின் மதிப்பு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் எனக் கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளுடன் அவ்வாடவர் மேல் நடவடிக்கைக்காக தாவாவ் போலீஸ் தலைமையகம் கொண்டுச் செல்லப்பட்டார்.

1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!