![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-12-at-1.59.09-PM-4.jpeg)
பகாங், ஏப்ரல் 12 – பகாங்கில் உள்ள லிங்காரான் தெங்கா உத்தாமா எனும் LTU நெடுஞ்சாலையில் நிரம்பி வழியும் குப்பைப் பிரச்சனையைத் தொடர்ந்து, தூய்மையைப் பராமரிக்காத சாலை பயனர்களை கடிந்துக் கொண்டுள்ளார் பகாங் மந்திரி பெசார்.
சாலை பயனர்கள் லாவகமாக குப்பைகளை வீசிச் அங்கும் இங்குமாக அவ்விடம் இருந்து வந்த நிலையில், தற்காலிகமாக அப்பிரச்சனையைக் களைய குறிப்பாக இந்த பண்டிகை காலத்தில் அங்கு பல குப்பைத் தொட்டிகள் தயார் செய்யப்பட்டிருந்ததையும் பகாங் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் சுட்டிக்காட்டினார்.
இச்சிக்கலுக்கு அந்த நெடுஞ்சாலையில் ஓய்வுடப்பகுதி இல்லாதத்தே காரணம் என கூறப்பட்ட நிலையில், சாலைப் பயனாளர்களின் வசதிக்காகவும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் Bentong-ங்கிலிருந்து Raub செல்லும் பாதையிலும், லிபிசில் உள்ள Kampung Kechau Tui ஆகிய இரண்டு இடங்களிலும் ஓய்வெடுக்கும் R&R நிலையத்தை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வான் ரோஸ்டி தெரிவித்தார்.
இதனிடையே, ஓட்டுநர்கள் சரியான இடங்களில் குப்பைகளை வீசுமாறு கூறிய அவர், குப்பைகளை வீசிச் செல்வதற்கு ஓய்வுடப்பகுதி இல்லாதது காரணம் என கூறுவதைவிட,நமது பொறுப்பற்ற குணமே காரணமாகும். எனவே இந்த எண்ண