![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-27-May-2024-08-19-PM-9345.jpg)
கோலாலம்பூர், மே 27 – கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்த சுங்கத்துறையின் 23 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நாளை முதல் ஆறு மாநிலங்களிலுள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்படும்.
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்கள் கடத்தப்பட்டது மற்றும் அவற்றின் விற்பனையில் கடத்தல்காரர்களுடன் உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படும் . அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் தனித்தனியாக இம்மாதம் முதல் ஜூன் 6ஆம்தேதிவரை குற்றஞ்சாட்டப்படுவார்கள் என எம்.ஏ.சி.சி இதற்கு முன் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தது.
சிலாங்கூர், கோலாலம்பூர், கிளந்தான், திரெங்கானு, பாஹாங், மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படும். பேங்க் நெகாரா மற்றும் உள்நாட்டு வருமான வரித்துறையின் ஒத்துழைப்போடு மார்ச் 11 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அந்த சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.
KLIA அனைத்துலக விமான நிலையத்தில் சரக்கு முனையத்தில் கடமையாற்றிவந்த கிரேட் 19 முதல் 44 கிரேட் வரையிலான 34 சுங்கத்துறை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் 27 தனிப்பட்ட மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களை எம்.ஏ.சி.சி கைது செய்தது.