Latestமலேசியா

கடுமையான மழை; ஒன் செலாயாங்கில் கார் நிறுத்துமிட பகுதி இடிந்து விழுந்தது

கோலாலம்பூர், ஏப் 17 – கோம்பாக், One Selayang Jalan OS 1/ 2 இல் இன்று காலையில் வாகன நிறுத்துமிடத்தின் கரைப்பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு வாகனங்கள் சிக்கிக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இன்று காலை மணி 10 அளவில் இச்சம்பவம் குறித்து தமக்கு அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கைக்கான உதவி இயக்குனர் Ahmad Mukhlis Mukthar தெரிவித்தார்.

செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த இரண்டு இயந்திரங்களுடன் ஆறு உறுப்பினர்களும் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டதோடு இரண்டு வாகனங்களின் பின்புற டயர்கள் சிக்கியிருப்தையும் கண்டனர். எனினும் இச்சம்பவத்தினால் அருகில் உள்ள கட்டிட அமைப்புக்கும் மற்றும் பொதுமக்களில் எவரும் பாதிக்கப்படவில்லையென தீயணைப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!