Latestஉலகம்

கடுமையான வெப்பத்தில் வேலைசெய்யும் கர்ப்பணிகளுக்குக் குழந்தை இறந்து பிறக்கலாம்; தமிழகத்தில் அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

இந்தியா, மார்ச் 21 – உலகம் முழுவதிலும் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கடுமையான வெப்பத்தில் வேலை செய்யும் கர்ப்பிணிகளுக்குக் குழந்தை இறந்து பிறப்பது, கருச்சிதைவு ஆகியவை நிகழும் ஆபத்து இரட்டிப்பாகக் கூடும் என்று இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கடுமையான வெயில் காலத்தில் வெளியே வெயிலில் வேலை செய்யும் பெண்களுக்கு முன்கூட்டியே பிறக்கும் அல்லது இறந்து பிறக்கும் அபாயம் 15 விழுக்காடு அதிகரிப்பதாகத் தெரியவந்தது.

தற்போது இந்தியாவில் 800 கர்ப்பிணிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெகுவாக மாறுபடுவதாகவும் அவை கவலை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. அதிக வெயிலில் கர்ப்பணி பெண்கள் வெளியில் செல்வதையும் வேலை செய்வதையும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், அங்கு பணிபுரியும் பெண்களுக்கு வேறு வழியில்லை. பணத்திற்காக வேலை செய்ய வேண்டிய கட்டாய சூழலில் அவர்கள் தன்நலத்தையும் புறம் தள்ளி வேலைக்குச் செல்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!