ஈப்போ, மார்ச் 8 – கடுமையான வெப்ப அலையின் பாதிப்பினால் ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எழுவரில் நால்வர் முழுமையாக குணமடைந்ததைத் தொடர்ந்து இவ்வார தொடக்கத்தில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். வெப்ப நிலை தொடர்பான உடல் நல பிரச்சனை காரணமாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் A . Sivenesan தெரிவித்தார். மேலும் மூவர் வெநோயாளியாக சிகிச்சை பெற்றனர், வெப்பநிலை உயர்வு காரணமாக பெரிய பிரச்னை எதுவும் ஏற்படவிலை. நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக நேற்று பேரா மாநில நிலையிலான உடல் பருமன் தொடர்பான இரு நாள் கருத்தரங்கை சிவநேசன் தொடக்கி வைத்தார்.
இதனிடையே உடல் பருமன் விவகாரத்தில் மலேசியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு பல்வேறு நோய்களுக்கு உடல் பருமன் முக்கிய காரணமாக இருப்பதால் இந்த விவாரத்தில் அலட்சிமாக இருந்துவிடக்கூடாது என சிவநேசன் கேட்டுக்கொண்டார். முடிந்தவரை சீனியை குறைத்துக்கொண்டு அதிக சீனி அளவைக் கொண்ட பானங்களை அருந்துவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.