![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-12-Feb-2024-11-34-AM-8472.jpg)
கோலாலம்பூர், பிப் 12 – மஞ்சோங், அயெர் தவார், கம்போங் பாருவிலுள்ள கடை வீட்டில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் வயதான மாற்றுத் திறனாளி ஒருவர் கருகி மாண்டார். சுமார் நான்கு மணி நேரத்திற்கு பின் தீயை அணைக்கும் நடவடிக்கை முடிவடைந்த பின்னர் அந்த கடை வீட்டில், 90 வயதுடைய லூ லெங் வியோன் என்பவரின் உடலை தீயணைப்புப் படை உறுப்பினர்கள் கண்டுப் பிடித்தனர். இரவு மணி 11.41 அளவில் அந்த தீ விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்தவுடன் அயெர் தவார் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்ததாக பேரா தீயணைப்பு நடவடிக்கைக்கான உதவி இயக்குனர் சபரோட்ஸி நோர் அகமட் தெரிவித்தார். இந்த தீ விபத்தில் அந்த கடை வீடு 70 விழுக்காடு எரிந்துவிட்டது. அதிகாலை மணி 3.35அளவில் அந்த கடை வீட்டின் மேல்மாடியிலுள்ள அறைக் கதவுக்கு அருகே இறந்தவரின் உடல் மீட்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக சபரோட்ஸி கூறினார்.