![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-21-Mar-2024-08-52-AM-3458.jpg)
தைப்பிங், மார்ச் 21 – உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறையின் பேரா அதிகாரிகள் கமுண்டிங்கிலுள்ள ஒரு கடையில் மேற்கொள்ளப்பட்டட சோதனையில் 704 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெயை பறிமுதல் செய்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவல் மற்றும் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அந்த சமையல் எண்ணெய் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகாரத்துறையின் இயக்குநர் டத்தோ Kammaludin Ismail தெரிவித்தார். அந்த சமையல் எண்ணெய் பொதுமக்களுக்கு விற்கப்படாமல் இருந்ததை நேரிடையாக கண்டறிந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் அந்த கடையில் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.