![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-03-Jun-2024-03-36-PM-8008.jpg)
புதுடில்லி, ஜூன் 3 – தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர்
மு.கருணாநிதியின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சோனியா காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கலைஞரின் பிறந்த நாள் விழா இன்று புதுடில்லியில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.
அங்கு அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். கலைஞர் படத்திற்கு சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கலைஞரின் புகைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மலிலிகாஜூன கார்கே, ராகுல் காந்தி, எம்.பிக்கள் டி.ஆர் பாலு, திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவைச் சேர்ந்த தமது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பல சந்தப்பங்களில் அவரது ஞான வார்த்தைகளாலும் அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தாக சோனியா காந்தி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரத்திற்கு பாதுகாப்பாக விளங்கிய தலைசிறந்த தலைவர் கலைஞர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.
அவரது பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து பெருமைப்படுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.