![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-28-Nov-2023-12-15-PM-6598.jpg)
காஜாங், நவ 29 – காஜாங் தாமான் புக்கிட் மேவாவில் 1.5 மீட்டர் ஆழமுள்ள கால்வாய் ஒன்றில் நேற்றுக் காலையில் ஆடவரின் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. வெள்ளை நிறத்திலான டீ சட்டை மற்றும் சாம்பல் நிற அரைக்கால் சிலுவார் அணிந்திருந்த நிலையில் அந்த ஆடவரின் உடல் மீட்கப்பட்டது. அந்த ஆடவர் நண்பகல் மணி 1.45 அளவில் இறந்திருக்கக்ககூடும் என காஜாங் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். அந்த நபரின் உடல் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என காஜாங் ஓ.சி.பி.டி துணை கமிஷனர் முகமட் சாயிட் ஹாசன் தெரிவித்தார். அந்த நபரின் மரணத்தை திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.