![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-22-Nov-2023-11-02-AM-1879.jpg)
உத்திரபிரதேசம், நவ 22 – இந்தியா உத்திரபிரதேசத்தில், வணிகத்தில் நஸ்டத்தில் சிக்கியிருந்த தன் காதலனுக்கு உதவ வீட்டை ஐவர் கொண்ட குழு கொள்ளையிட்டதோடு தன்னையும் கற்பழித்ததாக கணவனிடம் நாடகமாடிய பெண் கையும் களவுமாக பிடிபட்டார்.
வீட்டிலிருந்த சுமார் 1 லட்சத்து 50,000 ரூபாய் அதாவது 8400 ரிங்கிட் பெருமானமுள்ள நகைகள் திருடப்பட்டுள்ளது. அதோடு தான் நடத்திய நாடகம் உண்மையானது போல் இருக்க அப்பெண் தன்னைத் தானே சிகிரெட்டால் சூடும் வைத்துக் கொண்டுள்ளார்.
தொடக்கத்தில் இச்சம்பவம் குறித்து போலிசுக்கு தகவல் தர, போலிசாரின் விடாரணையின் ஒரு பகுதியாக, அப்பெண் கற்பழிக்கப்பட்டாரா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டதற்கான எந்த தடயமும் இல்லாததைக் கண்டு அப்பெண்ணிடம் விசாரித்ததில் உண்மை அம்பலமானது.