Latestமலேசியா

காதலியை கொலை செய்த ஆடவனுக்கு 35 ஆண்டுச் சிறை, 12 பிரம்படிகள்

புத்ரா ஜெயா, நவ 30 – ஏழு ஆண்டுகளுக்கு முன் தனது காதலியை கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் லோரி ஓட்டுனர் ஒருவருக்கு 35 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படிகள் விதிக்கப்படுவதாக கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மலாயா தலைமை நீதிபதி டான்ஸ்ரீ முகமட் ஸபிடின் முகமட் தியா தலைமையிலான மூவர் கொண்ட கூட்டரசு நீதிபதிகள் குழு சந்திரசேகரனுக்கு எதிரான மரண தண்டனைக்கான அரசு தரப்பின் முறையீட்டை அனுமதித்தனர்.

எனினும் மரண தண்டனை ரத்துச் செய்யப்பட்டதால் அதற்கு நிகராக 30 மற்றும் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொலைக் குற்றத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

அந்த அடிப்படையில் அவ்வாடவன் கைது செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து அவனுக்கு 35ஆண்டுகள் சிறைத் தண்டணை மற்றும் 12 பிரம்படி விதிப்பதாக நீதிபதி முகமட் ஸபிடின் தீர்ப்பளித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி சிம்பாங் புலாய், கம்போங் பத்து பெசி, லாடாங் செங்காட்டிலுள்ள ஒரு வீட்டில் 17 வயதான தனது காதலியை கொலை செய்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அவ்வாடவனுக்கு ஈப்போ உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!