Latestஉலகம்சினிமா

காதுக்கு கீழே இருந்த வீக்கத்திற்கு சிகிச்சை நிறைவு பெறறதால் இன்று மாலை அஜீத் வீடு திரும்புவார்

சென்னை, மார்ச் 8 – நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என இப்போது தெரியவந்துள்ளது. அஜித்தின் மூளையில் சிறு கட்டி இருந்ததால் கேராளாவில் இருந்து இரு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். அது தவறான தகவல் என இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் முழு உடலையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்ததை கண்டுப்பிடித்து நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரி செய்தனர். சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இன்று மாலை அவர் வீட்டிற்கு திரும்புவார் என கூறப்பட்டது. மகிழ்திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெறவிருப்பதால் அங்கு செல்வதற்கு முன் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் சென்னை அப்பலோ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்கு வந்தார். அவரது மூளையிலிருந்து கட்டி அகற்றப்பட்டதாக வெளியான தகவல் வதந்தியாகும் என அவரது நிர்வாகி சுரேஸ் சந்திரா தெரிதவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!