Latestமலேசியா

காரில் விஷ எரிவாயு சுவாசித்த பெண்மணி மரணம்

கோலாலம்பூர், நவ 27 – காரில் விஷ எரிவாயுவை சுவாசித்த பெண்மணி ஒருவர் மரணம் அடைந்தார். கோத்தா பாரு ஜாலான் சுல்தான் இப்ராஹிமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட காரில் ஒரு ஆடவரும் பெண்ணும் இருந்துள்ளனர். இரவு 10 மணியளவில் அக்காரில் இருந்த அவர்கள் இருவரும் சுயநினைவின்றி இருப்பதாக தகவல் கிடைத்ததாக கோத்தா பாரு போலீஸ் தலைவர் முகமட் ரோஸ்டி டாவுட் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். காரின் மொனோக்சிட் (Monoxide) எரிவாயுவை சுவாசித்தால் அதன் நச்சுத்தன்மை காரணமாக அக்காரிலிருந்த பெண்மணி இறந்தார் என்பது கோத்தா பாரு ராஜா பெரெம்புவான் ஜைனப் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவ பரிசோதனையின் மூலம் தெரியவந்ததாக முகமட் ரோஸ்டி கூறினார். அந்த காரில் இருந்த ஆடவர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!