Latestமலேசியா

காரை திருட சென்ற ஆடவன்; ஆறு மாணவர்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளான்

ரானாவ், நவம்பர் 1 – திருட சென்றது என்னவோ காரைத் தான்; ஆனால், அதில் இருந்த ஆறு மாணவர்களை கடத்த முயன்றதாக ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.

குண்டசாங்கில், நேற்று ஆடவன் ஒருவன் புரோட்டோன் பெசோனா ரக காரை திருட முயன்ற போது அச்சம்பவம் நிகழ்ந்ததை,ரானாவ் மாவட்ட போலீஸ் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் சிமியுன் லமுடின் உறுதிப்படுத்தினார்.

அவ்வாடவன் திருட முயன்ற காரில், எதிர்பாரா விதமாக பள்ளி மாணவர்கள் அறுவர் இருந்ததால், குற்றவியல் சட்டத்திந் கீழ் அவன் கடத்தல் குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளான்.

முன்னதாக, நேற்று மாலை மணி ஐந்து வாக்கில், கார் ஒன்றை திருட முயன்ற ஆடவனை போலீசாரும், பொதுமக்களும் வளைத்து பிடிக்கும் காணொளி ஒன்று வைரலானது.

குண்டசாங்கிலுள்ள, மளிகை கடை ஒன்றின் முன்புறம் அச்சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!