Latestமலேசியா

கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியது; ஏழு மாத பெண் குழந்தை கருகி மரணம்

கோத்தா பாரு, நவம்பர் 27 – கிளந்தான், ஜாலான் குவா மூசாங் – குவாலா கெராய் சாலையில், கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, விளக்கு கம்பத்தை மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றியத்தில், ஏழு மாத பெண் குழந்தை ஒன்று கருகி மாண்டது.

அவ்விபத்து, இன்று அதிகாலை மணி நான்கு வாக்கில் நிகழ்ந்தது.

விபத்துக்குள்ளான ஹோண்டா ஜாஸ் காருக்கு அருகில், கருகிய நிலையில், வான் சபினா அரிசா வான் ஷரிசாட் எனும் அக்குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

அவ்விபத்து குறித்து அதிகாலை மணி 4.04 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததாக, குவாலா கெராய் தீயணைப்பு மீட்புப் படையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி முஹமட் பட்சில் மூசா தெரிவித்தார்.

அக்குழந்தையின் தந்தையான 28 வயது வான் ஷரிசாட் அஸ்வான் வான் ஷரிஸ் கடுமையான தீப்புண் காயங்களுக்கு இலக்கான வேளை ; அவரது 25 வயது மனைவி நூர் ஹசிடா ரஸ்மி சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!