![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-25-Mar-2024-08-05-PM-8772-1.jpg)
கோலாலம்பூர், மார்ச் 25 – சர்ச்சைக்குரிய காலுறை விவகாரம் தொடர்பில் சில தனிப்பட்ட நபர்கள் மீது நாளை செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலையில் ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஐவர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என தெரிகிறது. உடந்தையாக இருந்தது மற்றும் மற்றவர்களின் சமய உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றவியல் சட்டத்தின் 109 ஆவது விதி மற்றும் 298 ஆவது விதியின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கவிருக்கின்றனர். KK Super Mart டைச் சேர்ந்த இருவர் மற்றும் மூன்று விற்பனையாளர்களும் இந்த விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.