Latestமலேசியா

கால்வாயில் விழுந்த இரண்டு வயது சிறுவனின் உடலை தம்பதியர் மீட்டனர்

மலாக்கா, நவ 27 – கடும் மழையின்போது மலாக்கா புக்கிட் பாலாவிலுள்ள தாமான் குட்வுட்டிலுள்ள கால்வாயில் சனிக்கிழமையன்று விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தையான முஹம்மட் டேனிஷ் முகமட் பைசல் உடல் நேற்று காலை மணி 9.20 அளவில் மீட்கப்பட்டது . நீரில் மூழ்கி இறந்த அந்த குழந்தையின் உடல், அக்குழந்தை விழுந்த இடத்திலிருந்து 1.3 கிலோமீட்டர் தொலைவில் கால்வாயில், முகமட் ஆரிஃப் சுல்கிஃப்லி மற்றும் நூர் ஹிடாயா யாஹ்யா என்ற தம்பதியர் கண்டுப் பிடித்தனர். அந்த குழந்தை கால்வாயில் விழுந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அதன் தாயார் நோர் அமிஸா சே கார் பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கையை படித்ததைத் தொடர்ந்து பெர்மாதாங் டுயோங்கை சேர்ந்த தாங்கள் அக்குழந்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டதாக முகமட் ஆரிஃப் மற்றும் நூர் ஹிடாயா தம்பதியர் தெரிவித்தனர்.

மலாக்கா புக்கிட் பாலா, தாமான் குட்வுட்டில் , நாசி கெராபு (Nasi Kerabu) விற்பனை செய்துகொண்டிருந்த அங்காடி கடைக்கு அருகே தமது நான்கு வயது சகோதரியுடன் விளையாடிக்கொண்டிருந்த தமது மகன் முஹம்மட் டேனிஷ் சனிக்கிழமை மாலை மணி 3.25 அளவில் காணவில்லையென 28 வயதுடைய நோர் அமிஸா சே கார் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!