![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/Collage-Maker-02-Nov-2023-10-11-AM-5947.jpg)
ஜெனிவா, நவ 3 – காஸாவில் மிகப் பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் போர் குற்றத்திற்கு ஒப்பானதாகும் என ஐ.நா மனித உரிமை அலுவலகம் சாடியது. இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக ஜபாலியா அகதிகள் முகாமை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த தாக்குதலின் இலக்கு வெற்றி அடைந்ததிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. ஜபாலியா அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தெளிவான போர் குற்றமாகும் என இதனை தாங்கள் கடுமையாக கருதுவதாக ஐ.நா மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.