![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-12-Dec-2023-03-50-PM-4632.jpg)
கெமமான், டிசம்பர் 12 – கிளந்தான், தெலுக் காலுங்கிலுள்ள, இரும்பு தொழிற்சாலை ஒன்றில், மியன்மார் ஆடவர் படுகொலை தொடர்பில், விசாரணைக்காக ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அச்சம்பவம் தொடர்பில், காலை மணி எட்டு வாக்கில், மருத்துவ அதிகாரிகளிடமிருந்து தகவல் கிடைத்ததாக, கெமமான் மாவட்ட போலீஸ் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் வான் முஹமட் வான் ஜபார் தெரிவித்தார்.
மொழிப் பெயர்பாளரான அந்த மியன்மார் ஆடவர், முதுகில் காயத்துடன், சிகிச்சைக்காக மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு கொண்டு வரப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார். எனினும், அவ்வாடவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய மதுத்துவர்கள், அச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கூரிய ஆயுதம் கொண்டு அவர் தாக்கப்பட்டது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஈஸ்டர்ன் ஸ்டீல் ‘Eastern Steel’ தொழிற்சாலையின், தொழிலாளர் தங்கும் விடுதியில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
அதனால், விசாரணைக்காக 25 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட உள்நாட்டு ஆடவர் ஒருவர் உட்பட, மூன்று சீன நாட்டவர்களுடன், மியன்மார் ஆடவன் ஒருவனும் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.