Latestமலேசியா

கிள்ளானில், பல முறை கத்தியால் குத்தப்பட்ட பெண் மரணம்

கிள்ளான், டிசம்பர் 20 – சிலாங்கூர், கிள்ளான், தாமாம் சி லியோங்கில், பெண் ஒருவர் கத்திக் குத்து காயங்களுடன் காரில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

முன்னதாக, ஆடவன் ஒருவன் வெறித்தனமாக அப்பெண்ணை கத்தியால் குத்துவதை கண்ட பொதுமக்கள், அச்சம்பவம் தொடர்பில், போலீசுக்கு தகவல் கொடுத்ததாக, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் சா ஹொங் பொங் தெரிவித்தார்.

கொலையூண்ட 26 வயது உள்நாட்டு பெண், நேற்று பிற்பகல் மணி 1.20 வாக்கில், உணவகம் ஒன்றில் அவ்வாடவனுடன் மதிய உணவு உட்கொண்டதும், அதன் காருக்கு திரும்பிய போது அவர் பலமுறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதும், தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர், அப்பெண்ணை காரில் தூக்கி போட்டு, காப்பாரிலுள்ள, தமது வீட்டிற்கு அவன் கொண்டு சென்றுள்ளான்.

அதன் பின்னர் அப்பெண் இறந்து விட்டதை உணர்ந்ததும், அவன் தம்மை தாமே குத்திக் கொண்டு காயமடைந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை மணி 4.20 வாக்கில் கைதுச் செய்யப்பட்ட அந்த 44 வயது உள்நாட்டு ஆடவன், விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!