![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/2738307-700x470.jpg)
கிள்ளான், ஜூன்-9 – கிள்ளான், பூலாவ் இண்டாவில் உள்ள மேற்கு துறைமுகத்தில் பல்வேறு தொழிற்துறை சரக்குகளை ஏற்றியிருந்த 14 கொள்கலன்கள் சனிக்கிழமை மதியம் தீப்பற்றிக் கொண்டன.
தகவல் கிடைத்து 24 பேருடன் சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை சம்பவ இடம் விரைந்தது.
ஒரு கொள்கலனில் மட்டுமே தீ ஏற்பட்டதாகவும், அது முழுவதுமாக எரிந்துப் போனதாகவும் தொடக்கக் கட்ட தகவல்கள் கூறியிருந்தன.
எனினும், தீயணைப்புத் துறை பரிசோதித்ததில் மொத்தமாக 14 கொள்கலன்கள் தீயில் சிக்கியது கண்டறியப்பட்டது.
பிற்பகல் 2.39 மணி வாக்கில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
தீப்பற்றியக் கொள்கலன்களை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்குத் துறைமுகத் தரப்பு மேற்கொண்டு வருகிறது.