Latestமலேசியா

குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் ஒரு ஆண்டுக்குள் பரிசீலிக்கப்படும் – உள்துறை அமைச்சு உத்தரவாதம்

புத்ரா ஜெயா, மார்ச் 26 – அரசியலமைப்பு சட்டத்தின் திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியவுடன் குடியுரிமை தொடர்பான விண்ணப்பங்கள் ஒரு ஆண்டுக்குள் பரிசீலிக்கப்படும் என உள்துறை அமைச்சு உத்தரவாதம் வழங்கியுள்ளது. ஒரு ஆண்டு காலக்கட்டத்திற்குள் குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் கடப்பாட்டை உள்துறை அமைச்சு கொண்டிருப்பதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ Saifuddin Nasution Ismail தெரிவித்திருக்கிறார். மேலும் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கும் பதில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பு சட்டத்தின் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் ஒரு ஆண்டுக்குள் குடியுரிமைக்கான விண்ணப்பங்களுக்கு பதில் தெரிந்துவிடும் என அமைச்சு மற்றும் ஊடகவியளார்களுடனான சிறப்பு சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது Saifuddin தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!