![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/saifu.png)
கோலாலம்பூர், மார்ச் 28 – குடியுரிமை மீதான விவாவதத்தில் பங்கேற்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail தெரிவித்திருக்கிறார். நடப்பு நாடாளுமன்ற கூட்டம் திட்டமிட்ட காலத்திற்கு ஏற்ப நேற்று முடிவுற்றபோதிலும் குடியுரிமை மீதான மசோதா முதல் மற்றும் இரண்டாவது வாசிப்பு முடிவுற்றதாக அவர் தெரிவித்தார். எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் குடியுரிமை மீதான விவாதத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பதற்கு நாங்கள் வாய்ப்பு வழங்குவோம் என அவர் கூறினார். குடியுரிமை மசோதா மீதான விவாதங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட வேண்டியிருப்பதாக Saifuddin தெரிவித்தார்.