![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-09-Nov-2023-07-21-PM-8103.jpg)
கோத்தா பாரு, நவ 9 – குடும்பத் தலைவிகளுக்கான சொக்சோ சமூக நல பாதுகாப்புத் திட்டத்தில் அதிகமானோர் விரைந்து பதிவு செய்துகொள்ளும்படி மனிதவள அமைச்சர் சிவக்குமார் கேட்டுக்கொண்டார். இவ்வாண்டு தொடக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 197,000 குடும்பத் தலைவிகள் பதிந்துகொண்டுள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த திட்டத்திற்காக அரசாங்கம் இரண்டு கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த ஆண்டு இத்திட்டத்திற்காக ஐந்து கோடி ரிங்கிட் ஒதுக்கப்படும்போது நான்கு லட்சம் குடும்பத் தலைவிகள் பயன் அடைவார்கள். இத்திட்டத்தில் இடம்பெற விரும்பும் குடும்ப தலைவிகள் சொக்சோ அகப்பக்கத்தில் அல்லது சொக்சோ அலுவலகங்களில் நேரடியாக சென்று பதிந்து கொள்ளலாம் என்று இல்லத்தரசிகளை சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.