![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-10-at-9.00.54-AM.jpeg)
கிள்ளான், டிச 10 – கிள்ளான் கம்போங் பெண்டாமாரில் உள்ள வீட்டின் குளியல் அறையில் சிமெண்ட் பூசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் எலும்புக்கூடு, இந்திய பிரஜையுடையது என போலிஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அப்பெண் சுமார் 30 வயதில் 160cm உயரத்தில் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் கமிஷனர் உசேய்ன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கிடைத்த தகவலின் அடிப்படையில் இறந்தப் பெண்ணின் உருவப்படத்தையும் போலிசார் வரைந்து வெளியிட்டுள்ளனர்.
அப்பெண் இதற்கு முன் அந்த வீட்டில் தங்கியிருந்த இரு இந்தியப் பிரஜைகளில் ஒருவனின் காதலி எனவும், அந்த இருவரையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலிசார் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அவர்களைக் கண்டுபிடிக்க இந்திய தூதரகத்தின் உதவியையும் போலிசார் நாடியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஏற்கனவே 53 வயது ஆடவனையும் போலிஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டார்.