![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-10-at-13.31.13_d9a1e40c.jpg)
குளுவாங், மார்ச் 10 – குளுவாங் ரெங்கமில் நிலத்திற்கு அடியில் நீர்க் குழாயை பகுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்த 59 வயதுடைய ஆடவர் ஒருவர் உயிருடன் புதையுண்டார்.
‘Jalan Kluang -Tech wah Heng’ சாலையின் 41.5 ஆவது கிலோமீட்டரில் நேற்று மாலை மணி 3.32 அளவில் இந்த பரிதாப சம்பவம் நடந்ததாக குளுவாங் துணை OCPD நிக் முகமட் ஆஸ்மி ஹுசின் தெரிவித்தார்.
இதர இருவருடன் உலோக நீர்க் குழாய்கனை வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது ரோஸ்டம் அமிருதீன் ஹாசன் என்ற தொழிலாளி புதையுண்டார்.
அந்த மூவரும் 1. 8 மீட்டர் ஆழமுள்ள குழியின் உள்ளே வேலை செய்துகொண்டிருக்கும்போது திடிரென அந்த குழியை சுற்றியிருந்த மண் சரிந்ததில் சில குழாய்களுக்கிடையே சிக்கிக்கொண்ட ரோஸ்டம் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் இதர இருவர் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினர்.