![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/2724494.webp)
கோலாலம்பூர், மே 31 – கூட்டரசு நெடுஞ்சாலையில் விளம்பரப் பலகையில் தீப்பற்றி எரிந்ததைத் தொடர்ந்த அங்கு வேலை செய்த கொண்டிருந்த 9 வெளிநாட்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அருகே பிற்பகல் மணி 1.25 அளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் ஒருவர் கையில் காயத்திற்கு உள்ளானார். இதர எட்டுபேர் சொற்ப காயத்திற்கு உள்ளாகினர். இத்தீவிபத்து குறித்த காணொளி சமூக வலைத்தளத்திலும் வைரலாகின.
தீ விபத்தில் காயம் அடைந்த அனைவரும் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அந்த மின்னியல் விளம்பரப் பலகையில் தீப்பிடிப்பதற்கு முன் அதில் மின்சார அதிர்ச்சி ஏற்பட்டதைத் தொடரந்து மின்னல் வேகத்தில் தீ அந்த விளம்பர பலகையின் மேற்பகுதிவரை பரவியதாக பாதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவர் தெரிவித்தார். தீவிபத்து ஏற்பட்ட இடத்திலேயே காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சையை வழங்குவதையும் பார்க்க முடிந்தது.