![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-17-Nov-2023-11-09-AM-4052.jpg)
கோலாலம்பூர், நவ 17 – கெடாவில் கோத்தா செதார் மற்றும் குபாங் பாசு மாவட்டங்களில் வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அவ்விரு மாவட்டங்களிலும் உள்ள நான்கு நிவாரண மையங்களில் நேற்றிரவுவரை 74 குடும்பங்களைச் சேர்ந்த 231 பேர் தங்கியுள்ளனர். கோத்தா செதார் மாட்டத்தில் மூன்று நிவாரண மையங்களும் ,குபாங் பாசுவில் மற்றொரு நிவாரண மையமும் செயல்பட்டு வருவதாக கெடா பேரிடர் நிர்வாக செயலகத்தின் தலைவர் மேஜர் முஹம்மட் சுஹைமி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே பேராவில் திறக்கப்பட்டுள்ள நான்கு நிவாரண மையங்களிலும் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 155 பேராக குறைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது