![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-05-Jun-2024-08-14-PM-668.jpg)
கோலாலம்பூர், ஜூன் 5 – கெந்திங் மலையில் சூதாட்ட அறைக்குள் புகுந்து 4.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 1,160 சிப்ஸ்களை திருடியதாக டுரியான் விற்பனையாளர் ஒருவர் மீது ரவுப் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் சித்தி அய்ஷா அகமட் (Siti Aisyah Ahmad ) முன்னிலையில் 45 வயதுடைய லீ கியான் கியோங் ( Lee Kian Keong ) என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் அதனை மறுத்தார்.
ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்ட மூவருடன் சேர்ந்து , கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி Sky Casino Genting Highlands, Twilight 3 அறையை உடைந்து அந்த சிப்ஸ்களை திருடியதாக லீ கியான் கியோங்கிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 10,000 லிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு ஜூலை 26ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.