Latestமலேசியா

கெந்திங் சூதாட்ட நிலையத்தில் 4.6 மில்லியன் ரிங்கிட் சிப்ஸ் திருடியதாக டுரியான் விற்பனையாளர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூன் 5 – கெந்திங் மலையில் சூதாட்ட அறைக்குள் புகுந்து 4.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 1,160 சிப்ஸ்களை திருடியதாக டுரியான் விற்பனையாளர் ஒருவர் மீது ரவுப் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் சித்தி அய்ஷா அகமட் (Siti Aisyah Ahmad ) முன்னிலையில் 45 வயதுடைய லீ கியான் கியோங் ( Lee Kian Keong ) என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் அதனை மறுத்தார்.

ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்ட மூவருடன் சேர்ந்து , கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி Sky Casino Genting Highlands, Twilight 3 அறையை உடைந்து அந்த சிப்ஸ்களை திருடியதாக லீ கியான் கியோங்கிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 10,000 லிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு ஜூலை 26ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!