
பெந்தோங், ஜூன் 11 – கெந்திங் மலையில் ஒரு கும்பல் தனது குழந்தைகளை கடத்திச் செல்லவிருப்பதாகக் கூறும் வீடியோ தொடர்பாக டிக்டாக் பயனரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வைரல் வீடியோவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், தனது குழந்தைகளை அணுகும்போது ஒரு ஆண் தனது குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்ததாக அந்தப் பெண் கூறியிருந்தார்.
ஜூன் 9 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் டிக்டாக்கில் அந்த வீடியோவை போலீசார் கண்டறிந்ததாகவும் கெந்திங் மலையில் குழந்தை கடத்தல் முயற்சி நடந்ததாகக் ஒரு பெண் கூறியிருந்ததாக Bentong மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent ஸைய்ஹாம் முகமட் கஹார் ( Zaiham Mohd Kahar ) தெரிவித்தார். நேற்று வரை, இதுபோன்ற சம்பவம் குறித்து எந்த போலீஸ் நிலையத்திலும் புகார் எதுவும் செய்யப்படவில்லை. ‘@awiegerbangmalam’ என்ற டிக்டோக் கணக்கு வைத்திருப்பவர் விசாரணைக்கு உதவ Bentong போலீஸ் தலைமையகத்திற்கு வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.