![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-20-May-2024-07-26-PM-4865.jpg)
சிரம்பான், மே 20 – Gemas -சில் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று Felda Sungai Kelamah செம்பனை தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடு ஒரு மாதத்திற்கு முன்னதாக காணாமல்போன Muhammad Syafiq Salehin என்பவருடையது என இன்று உறுதிப்படுத்தப்பட்டது . 33 வயதுடைய Muhammad Syafiq ஆகக்கடைசியாக Kampung Tengah Air Kuning Selatan என்ற முகவரியைக் கொண்டிருந்தார் என்பதோடு மரபணு பரிசோதனை முடிவு மற்றும் விசாரண மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டதாக Tampin மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரடண்ட் Amiruddien Sariman தெரிவித்தார்.
March மாதம் 25ஆம்தேதி முதல் காணமால்போன Muhammad Syafiq Salehan உடல்தான் அந்த எலும்புக் கூடு என மரபணு பரிசோதனையின் முடிவு உறுதியானது. அவர் திடீர் மரணம் அடைந்ததாக வகைப்படுத்தப்பட்ட போதிலும் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Amiruddien குறிப்பிட்டார். அந்த எலும்புக் கூட்டிற்கு அருகே ஹெல்மட் , மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு இடைவாரும் காணப்பட்டதாக இதற்கு முன் ஊடகங்களில் தகவல் வெளியானது.