Latestமலேசியா

கொதிக்கும் நீரில் உயிருடன் 10 பூனைகளை போட்ட கொடூரம்

ஜெரண்டூட் , டிச 2 – கொதிக்கும் நீரில் உயிருடன் 10 பூனைகளை போட்ட கொடூரமான சம்பவம் பஹாங் , ஜாலான் ஜெரான்துட் – தெமர்லோவிலுள்ள பசார் போரோங் சந்தையில் நடந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை மணி 5 அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளதாக ஜெரான்துட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிட்டெண்டன்ட் அஸ்மான் மாட் கமிஸ் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து 27 வயதுடைய ஆடவர் ஒருவர் நேற்று போலீசில் புகார் செய்துள்ளார். 10 பூனைகள் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து அவை கொதிக்கும் நீரில் போடப்பட்டதால் இறந்திருப்தாக கண்டு அந்த ஆடவர் புகார் செய்திருக்கிறார் என மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அஸ்மான் கூறினார். இச்சம்பவம் குறித்த தகவல்களை அறிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசுடன் தொடர்புகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!