![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-12-Dec-2023-09-52-AM-5963.jpg)
கோலாலம்பூர், டிச 12 – கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் கணக்காய்வாளரின் உடல் நிர்வாண நிலையில் கம்போங் செராஸ் பாரு , ஜாலான் குவாரியில் சாலையோரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. 28 வயதுடைய அந்த ஆடவரின் உடலை நேற்று விடியற்காலை 6 மணியளவில் பொதுமக்கள் கண்டு போலீசிற்கு தெரிவித்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஸாம் ஹலீம் ஜமாலுடின் கூறினார். அந்த கணக்காய்வாளரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அந்த உடலை அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டதாக அவர் தெரிவித்தார். குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் கொலை குற்றத்தின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஸாம் ஹலீம் தெரிவித்தார்.