Latestமலேசியா

கோத்தா திங்கி பெல்டா புக்கிட் அபிங் பாராட் வட்டாரத்தில் புலி நடமாட்டத்தின் கால்பாத அடையாளங்கள்

கோத்தா திங்கி , டிச 9 – கோத்தா திங்கிபெல்டா புக்கிட் அபிங் பாராட் வட்டாரத்தில் புலி நடமாட்டம் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் புலியின் கால் பாத அடையாளங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தாமான் நெகாரா மற்றும் ஜொகூர் வட்டாரத்திற்கான வனவிலங்கு துறையின் இயக்குனர் அமினுடின் ஜாமின் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏற்கனவே பெல்டா புக்கிட் அபிங் வட்டார மக்களும் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிளந்தான் குவா மூசாங் வட்டாரத்தில் மிகவும் கொடூரமான முறையில் புலியால் தாக்கப்பட்ட ஐந்து சம்பவங்களில் நால்வர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அதனை பிடிப்பதற்காக 11 பொறிகள் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர புலி நடமாட்டத்தை தெரிந்துகொள்வதற்காக அங்கு 20 கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காத்துறையின் இயக்குனர் ஹபீட் ரோஹானி தெரிவித்தார். குவா மூசாங் வட்டாரத்தில் கடந்த அக்டோபர் மாதம் மூவரும், நவம்பர் மாதம் மற்றொருவரும் புலியின் தாக்குதலுக்கு உள்ளாகி மரணம் அடைந்தனர். மலேசியாவில் நடந்துள்ள புலி சம்பந்தட்ட மோசமாக தாக்குதல் இதுவாகும் என ஹபீட் ரோஹானி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!