Latestமலேசியா

கோத்தா பாரு தடுப்பு காவலில் ஆடவர் மரணம்

கோலாலம்பூர், நவ 24 – கோத்தா பாருவில் பெங்காலான் செப்பா போலீஸ் லாக்காப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார். போதைப் பொருள் தொடர்பாக அபாயகரமான போதைப்பொருள் சட்டட்தின் கீழ் கைது செய்யப்பட்ட 38 வயதுடைய அந்த ஆடவருக்கு புதன்கிழமையன்று பெங்காலான் செப்பா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இரவு மணி 7.42 அளவில் நெஞ்சு வலிப்பதாக அந்த ஆடவர் கூறியதாகவும் மருத்துவர் வந்து பரிசோதித்தபோது அவர் இறந்து கிடந்ததாக நன்னெறி மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குனர் அஸ்ரி அஹ்மாட் தெரிவித்தார்.

அவரது உடலில் கோத்தா பாரு ராஜா பெரெம்புவான் ஜாய்நாப் மருத்துவமனையில் சவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்செயல் தொடர்பான எந்தவொரு காயங்களும் உடலில் கண்டறியப்படவில்லையென அஸ்ரி அஹ்மாட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!