Latestமலேசியா

கோம்பாக்கில், வீட்டு வாடகை தகராறு; கத்தி குத்துக்கு இலக்காகி மூதாட்டி மரணம்

கோம்பாக், நவம்பர் 29 – சிலாங்கூர், கோம்பாக், தாமான் எசான் பகுதியில், மூதாட்டி ஒருவர் காரில் இறந்து கிடக்க காணப்பட்ட சம்பவம் தொடர்பில், எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை, காரில் இரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியை கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

எனினும், போலீசார் சம்பவ இடத்தை சென்றடைவதற்கு முன்னரே அம்மூதாட்டி இறந்து விட்டதாக, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.

அந்த கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 21 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட எட்டு ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து மூதாட்டியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ், அவர்கள் அனைவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மூதாட்டிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கும் அவ்வாடவர்கள், வாடகை பணம் தொடர்பில் மூண்ட தகராறு காரணமாக, அவரை கொலை செய்ததாக நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!