Latestமலேசியா

கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயிலில் திருப்பணி தொடக்க பூஜையும் நன்கொடை வழங்கும் நிகழ்வும் இன்று சிறப்பாக நடைபெற்றது

கோலாலம்பூர், ஜூன் 2 – கோலாலம்பூர் ஜலான் பண்டார் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில்களில் ஒன்றான ஜாலான் புடு லாமாவிலுள்ள பிரசித்தி பெற்ற கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயிலின் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு மத்தியில் ஜூன் மாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகம விதிகளுக்கு உட்பட 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆலயம் கும்பாபிஷேகம் காணப்பட வேண்டும் என்பது நமது மரபாக இருப்பதால் இதற்கான திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2012 ஆம் ஆண்டு கும்பாபஷேகம் காணப்பட்ட இந்த ஆலயம் தற்போது முழு கருங்கல் திருத்தலமாக புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆலயத்தின் முகப்பு நுழைவாயில் ,தூண்கள், 32 விநாயகப் பீடங்கள் மணிமண்டபம் அனைத்தும் கருங்கற்களால் அமைக்கப்பபட்டு வருகின்றன.

அதனை முன்னிட்டு இன்று கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் திருப்பணி தொடக்க பூசையும் , கும்பாபிஷேகத்திற்கான நன்கொடை வழங்கும் நிகழ்வும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவரும் அறங்காவலருமான டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ம.இகாவின் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவக்குமார், தேவஸ்தானத்தின் இதர பொறுப்பாளர்கள், , சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் டான்ஸ்ரீ பாலன், உட்பட பல பிரமுகர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதனிடையே கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் திருப்பணிகளுக்காக நன்கொடை வழங்கவிரும்பும் பக்தர்கள் நன்கொடைகளை தாராளமாக வழங்கி உதவும்படி டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!