Latestமலேசியா

கோலாகங்சாரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து 1.4 மில்லியன் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

ஈப்போ, நவ 7 – கோலாகங்சார் மாவட்டத்தில் நகைக்கடைக்கு முன்புறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரிலிருந்து 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை மணி 11.22 அளவில் அந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது குறித்து தங்களுக்கு புகார் கிடைத்ததாக கோலாகங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ACP ஒமார் பக்தியார் யாக்கோப் தெரிவித்தார்.

வெட்டுக் கத்தி மற்றும் சுத்தியல் வைத்திருந்த முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள் இரண்டு நகை வியாபாரிகளை மிரட்டி அந்த நகைகளை கொள்ளையிட்டதாக அவர் கூறினார். அந்த வர்த்தகர்களின் காரின் ஜன்னல் கண்ணாடியை நொறுக்கிய பின் அவர்கள் 1.4 மில்லியன் நகைகளுடன் தப்பிச் சென்றதாக ACP ஒமார் பக்தியார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!