Latestமலேசியா

கோலாலம்பூரில் ஓடிக்கொண்டிருந்த கார் மீது மரம் விழுந்து பெண் மரணம்

கோலாலம்பூர், நவ 1 – கோலாலம்பூரில் ஜாலான் உலு யாம்-கோம்பாக் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில் அக்காரை ஓட்டிச்சென்ற பெண் ஒருவர் மரணம் அடைந்தார். நேற்று மாலை மணி 6.14 அளவில் நிகழ்ந்த இச்சம்பவம்பவம் குறித்து அவசர அழைப்பு கிடைத்தவுடன் உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு கோலாகுபுபாரு தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு வண்டியையைச் சேர்ந்த நான்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீ மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை மையத்தின் தலைவர் சுல்பிகர் ஜாஃபர் தெரிவித்தார்.

அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பெரோடுவா அல்சா (Perodua Alza) கார் மீது மரம் விழுந்து கிடப்பதையும் அக்காருக்குள் பெண் ஓட்டுனர் ஒருவர் சிக்கிக்கொண்டிருப்பதையும் கண்டனர் . அவர்கள் உடனடியாக மரத்தை வெட்டிய பின் அக்காருக்குள் இருந்த பெண்ணை இரவு மணி 7.10 அளவில் மீட்டனர். எனினும் அப்பெண் மரணம் அடைந்ததை அங்கு இருந்த மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தியதாக சுல்பிகர் ஜாஃபர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!