Latestமலேசியா

கோலாலம்பூரில், பரபரப்பான சாலையில், மின்சார ஸ்கூட்டரில் வலம் வரும் வெளிநாட்டு ஜோடி ; பாதுகாப்பை அலட்சியப்படுத்தியதால், இணையவாசிகள் கொந்தளிப்பு

கோலாலம்பூர், ஜூன் 10 – தலைநகரில், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சாலையில், மின்சார ஸ்கூட்டரில் அந்நிய ஜோடி லாவகமாக வலம் வரும் காணொளி ஒன்று வைரலாகி, கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

அந்த காணொளி @nikhaelneil எனும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சாலையில், வெளிநாட்டு ஜோடி மின்சார ஸ்கூட்டரை கொண்டு லாவகமாக வலம் வருவதை காண முடிகிறது.

குறிப்பாக, ஆடவர் ஒருவர் அந்த ஸ்கூட்டரை செலுத்தும் வேளை ; பின்னால் நின்றவாறு பெண் ஒருவர் அவருடன் பயணிக்கிறார்.

ஒரு கட்டத்தில், ஒரு கையால் தனது கைப்பேசியை கொண்டு அப்பெண், சுற்றியுள்ள காட்சிகளை ஒளிப்பதிவுச் செய்கிறார்.

தங்களின் அந்த பயணத்தை அவர்கள் இருவரும் இரசித்து கொண்டே பயணிக்கும் போதும், அது அவர்களுக்கும் இதர வாகனமோட்டிகளுக்கும் எவ்வளவு பெரிய ஆபத்தை கொண்டு வரும் என்பதை, அவர் கொஞ்சமும் உணரவே இல்லை என, அந்த காணொளியை பார்வையிடும் இணையப் பயனர்கள் பலர் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“யார் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது?” என அதில் கேள்வி எழுப்பியுள்ள வேளை ;
“உள்நாட்டு சாலை விதிமுறைகளுக்கு மதிப்பளியுங்கள், இதர வாகனமோட்டிகளுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்” என மற்றொருவர் கடுமையாக சாடியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!