![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-28-May-2024-01-18-PM-7317.jpg)
கோலாலம்பூர், மே 28 – சூப்பர் லீக் போட்டி நேற்று முடிவடைந்ததை அடுத்து, பெட்டாலிங் ஜெயா காற்பந்து மைதானத்தில் மூண்ட சலசலப்பில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அச்சம்பவம் தொடர்பான இரு காணொளிகள், சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளதை, நேற்றிரவு மணி 10.15 வாக்கில் போலீசார் அடையாளம் கண்டதாக, பெட்டாலிங் ஜெயா மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் எம்.ஹுசின் சோலெஹுடின் சோல்கிப்ளி தெரிவித்தார்.
அச்சம்பவத்தால், காற்பந்து அரங்கில், இரசிகர்கள் அமரும் இடத்திற்கு செல்லும் வழியிலுள்ள உலோகக் கதவு சேதமடைந்துள்ளதாகவும் ஹுசின் சொன்னார்.
அதனால், குற்றவியல் சட்டம் மற்றும் தொடர்பு பல்லூடக சட்டங்களின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
அச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.