![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-23-Apr-2024-09-30-AM-1510.jpg)
கோலாலம்பூர் , ஏப் 23 – கோலாலரம்பூர், Jalan Bukit Bintangகில் நேற்றிரவு பூட்டிக்கொண்ட காரில் சிக்கிக் கொண்ட இரண்டு வயது ஆண் குழந்தையை மலேசிய பொது தற்காப்பு படை உறுப்பினர்கள் மீட்டனர். இரவு எட்டரை மணியளவில் அந்த குழந்தைக்கான Pamper சை மாற்றிவிட்டு அதனை வீசச் சென்றபோது அக்கார் பூட்டிக்கொண்டதாக கோலாலம்பூர் பொது தற்காப்பு படையின் நடவடிக்கை பிரிவின் அதிகாரி Leftenan Sharul Kamar Mohd johari தெரிவித்தார். தென் கொரியாவைச் சேர்ந்த பிரஜை ஒருவர் தனது குழந்தையின் கையில் கார் சாவி இருப்பதை உணராமல் கார் கதவை மூடியதால் அக்குழந்தை காரில் சிக்கிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த பொது நடவடிக்கை குழுவின் உறுப்பினர்கள் 10 நிமிடங்களில் கார் கதவை வெற்றிகரமாக திறந்து குழந்தையை பாதுகாப்புடன் மீட்டனர்.