Latestமலேசியா

கோலா கங்சாரில், நாற்காலியை கொண்டு தந்தையை தாக்கி காயப்படுத்திய ஆடவன் ; குற்றத்தை ஒப்புக் கொண்டான்

கோலா கங்சார், மே 27 – பேராக், கிரீக்கில், கடந்த வியாழக்கிழமை, சொந்த தந்தையை பிளாஸ்டிக் நாற்காளியை கொண்டு தாக்கி காயப்படுத்தியது தொடர்பில், கைதுச் செய்யப்பட்ட ஆடவனுக்கு எதிராக இன்று கோலா கங்சார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

35 வயது அஹ்மாட் ஜிக்ரி ஹருன் எனும் அந்த ஆடவன் தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டான்.

முன்னதாக, தனது 74 வயது தந்தையை, வேண்டுமென்றே பிளாஸ்டிக் நாற்காலியை கொண்டுந் தாக்கி காயம் விளைவித்ததாக அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்தான்.

இம்மாதம் 23-ஆம் தேதி, இரவு மணி எட்டு வாக்கில், கிரீக், ஜாலான் குவாலா ரூய் எனுமிடத்திலுள்ள, வீடொன்றில் அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.

ஐயாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் அவ்வாடவன் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை ஜூன் 28-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!