Latestமலேசியா

‘கோல்ட்பிஷ்களுடன்’ மீன் வளர்ப்பு தொட்டியில் நீந்தி விளையாடும் சிறுவன் ; காணொளி வைரல்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 15 – மகனை மீன் வளர்க்கும் தொட்டில் நீந்த அனுமதித்த தந்தை ஒருவரின் செயல், இணையவாசிகளின் கவநத்தை ஈர்த்துள்ளது.

சம்பந்தப்பட்ட தந்தையின் டிக் டொக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு நிமிட காணொளி வைரலாகியுள்ளது.

அந்த காணொளியில், “அகுவாரியம்” மீன் வளர்ப்பு தொட்டியிலுள்ள, “கோல்ட்பிஷ்களுடன்” சிறுவன் ஒருவன் நீந்தி விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

“மகன் ஆசைப்பட்டான். நான் நிறைவேற்றி வைத்தேன்” எனும் தலைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த காணொளி இணையப் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை ஏழு லட்சத்திற்கு அதிகமானோர் அந்த காணொளியை பார்வையிட்டுள்ள வேளை ; ஈராயிரத்துக்கும் அதிகமான கருத்துகள் குவிந்துள்ளன.

“சிறு வயதில் இது போல நீந்திப் பார்க்க நான் தவறிவிட்டேன்” என அதில் ஒருவர் குறிப்பிட்டுள்ள வேளை ; “இது கட்டாயம் தந்தையின் செயல் தான், தாயாக இருந்ததால் கட்டாயம் அப்படி நீந்த சிறுவன் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது” என மற்றொருவர் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!