கோலாலம்பூர், பிப் 6 – இணைய குற்றச்செயல்கைளை துடைத்தொழிப்பதற்கு அதற்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் ஆலோசனை குறித்த சிறப்பு பணிக்குழு கூட்டத்திற்கு பிரதமர் துறையின் சட்டம், அமைப்பு சீரமைப்புக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா மற்றும் தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் தலைமையேற்றனர். இணைய குற்றச் செயல்களை துடைத்தொழிப்பதற்காக புதிய சட்டங்களை வரைவதுடன் தொடர்ந்து மிரட்டலாக இருக்கும் கணினி உலகிலிருந்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் மீது மடானி அரசாங்கம் கொண்டிருக்கும் பரிவாகவும் இந்த நடவடிக்கை இருப்பதாக அஸாலினா தெரிவித்தார். இணைய வசதிகளில் நிறைய பயன்கள் இருந்தாலும் அதனை பயன்படுத்தி நிதி மோசடி உட்பட அதிகமான குற்றச்செயல்கள் நடைபெறுவதால் அதனை தடுப்பதற்கான சட்டங்களும் தேவையென X-ஸில் அஸாலினா பதிவிட்டுள்ளார்.
Check Also
Close