![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/2729174.jpg)
கெனிங்காவ், ஜூன் 4 – சபா, Pekan Sook கிலுள்ள பெட்ரோல் நிலையத்தின் கண்ணாடிக் கதவை இரும்பினால் உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்து ரொக்கம், சிகரெட் மற்றும் கை தெலைபேசியையும் திருடிச் சென்ற மூன்று நபர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பெட்ரோல் நிலையத்திற்கு சுமார் 4,500 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த எரிபொருள் நிலையம் இயங்காதபோது இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்துள்ளது. இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களின் நடவடிக்கைகள் அந்த பெட்ரோல் நிலையத்தின் ரகசிய கண்காணிப்பு கேமராவின் காணொளியில் பதிவாகியுள்ளது. அவர்கள் Perodua Beza கார் மூலம் அந்த பெட்ரேல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அந்த காரின் எண் பட்டை போலியானது என்பதோடு அது மற்றொரு காரின் எண் பட்டை என்றும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்கள் ஜேக்கேட் அங்கி அணிந்திருந்ததோடு கையுறை மற்றும் முகக் கவசத்தையும் அணிந்திருந்தனர். அந்த சந்தேகப் பேர்வழிகளில் ஒருவன் கண்ணாடி கதவை உடைத்த பின் இதர இருவர் கொள்ளையிடுவதற்காக உள்ளே நுழைவதை காணொளியில் காண முடிந்ததாக Kenigau மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Yampil Anak Garai தெரிவித்தார்.